பேடி எம் காலக்கெடு ஓவர்…
இந்தியாவில் மிக முக்கிய நிதி நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக பே டி எம் இருக்கிறது. இந்நிறுவனம் விதிகளை மதிக்கவில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் புதிய பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது என்றும் , ஏற்கனவே கணக்கில் இருக்கும் தொகையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. இந்த சூழலில், பேடி எம் பேமென்ட் பேங்கில் கணக்கு வைத்திருந்தால் புதிய டெபாசிட் செய்ய இயலாது. சம்பள கடன் பெற இயலாது.வாலட்களை டாப் அப் செய்ய இயலாது. இதே போல் என் சி எம் சி கார்டுகள் இயங்காது. பேடிஎம் முக்கு பதிலாக வேறொரு வங்கி கணக்குகள் பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. Imps வகையில் இனி பணம் அனுப்ப இயலாது. அதே நேரம் வழக்கமான பேடிஎம் செயலி பயன்பாட்டில் எந்த தடையும் இல்லை.பெட்டிக்கடைகளில் பே டி எம் வழக்கமாக பயன்படுத்த இயலும் என்றும் கூறப்படுகிறது.