கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தை நியமித்த நிறுவனம்..

ஓலா நிறுவனத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்ட வாடகை கார் சேவைகள் வழங்கும் நிறுவனம் புளூ ஸ்மார்ட். இந்த நிறுவனம், பெற்ற கடனை வேறுபயன்பாட்டுக்கு திருப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் கிரான்ட் தார்ன்டன்நிறுவனத்தை தணிக்கைக்காக நியமித்துள்ளது. புளூ ஸ்மார்ட் நிறுவனத்திடம் 8ஆயிரம் கார்கள் உள்ளன. டெல்லி .,மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த நிறுவனத்தின் கேப்கள் இயங்கி வருகின்றன. டெல்லியில் தங்கள் நிறுவனம் 9 விழுக்காடு கேப்களை வைத்திருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த நிலையில் சேவைகளை வழங்கக்கூடாது என்று கடந்தவாரம் செபி அறிவிப்பை வெளியிட்டது. நிறுவனத்தை மேம்படுத்த வாங்கிய கடனில், 5 மில்லியன் டாலர் அளவுக்கு சொகுசு பங்களாவை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அன்மோல் ஜக்கி வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து புளூஸ்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சேர்ந்து கிரான்ட் தார்ன்டன் நிறுவனம் தணிக்கை நடத்த ஆணையிட்டுள்ளது. பிரிட்டன் ஆயில் நிறுவனமானBPநிறுவனத்தின் கிளை நிறுவனமாக புளூஸ்மார்ட் திகழ்கிறது. ஜென்சோல் நிறுவனத்திடம் இருந்து கார்களை வாங்கி அதனை வாடகைக்கு விடும் பணிகளில் ஜக்கி ஈடுபட்டிருந்தார்.78 மில்லியன் டாலர் அளவுக்கு பெற்ற கடனில் ஒரு பெரிய பகுதி ஜக்கி வீட்டுக்கு சென்றுள்ளதாக புகார் ஏழுந்தது. சந்தை விதிகளுக்கு முழுவதும் தங்கள் நிறுவனம் கட்டுப்படுவதாக ஜென்சோல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில்மட்டும் ஜென்சோல் நிறுவனம் அதன் மதிப்பில் 90 விழுக்காடை இழந்துவிட்டது.