முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு
![முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு](https://mp-12660.b-cdn.net/wp-content/uploads/2021/08/franklin-Templeton-2.jpg)
“பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது, ஏற்கனவே இந்த 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு, 23 ஏப்ரல் 2020-ல் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பின் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்திருந்த வாடிக்கையாளரின் முதலீட்டில் (AUM) 84% தொகையான ₹21,080.34 திருப்பி அளிக்கப்பட்டது.
உபரியாக நிறுவனத்திடம் இருக்கும் பணமானது இன்னும் சில நாட்களில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. பெருந்தொற்று காரணமாக கடன் சந்தையில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் மட்டும் “பிராங்க்ளின் டெம்பிள்டன்” இந்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு 5 பகுதிகளாக 21,080.34 கோடி ரூபாயை திருப்பி அளித்திருக்கிறது.
முதலீட்டு மேலாண்மை மற்றும் ஆலோசனைக் கட்டணமாக நிறுவனம் வசூலித்த 512 கோடி பணத்தை முதலீட்டாளர்களிடம் திருப்பி அளிக்குமாறு கடந்த ஜூன் 7 ஆம் தேதி செபி (SEBI) “பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 2020 இல் மூடப்பட்ட 6 கடன் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பாகக் கூறி இந்த நிறுவனத்திற்கு 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் நிறுவனத்துக்கு ஆறுதல் தரும் விதமாக பிணைகளுக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Securities Appellate Tribunal) செபியின் உத்தரவில் சிலவற்றை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக முதலீட்டாளர்களுக்கு தங்களது பணம் திரும்ப பெறும் சூழல் உருவாகியுள்ளது.